தன்னறம் அறிமுகம் (About Thannaram)

தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன்

விதைவழி செல்க – நம்மாழ்வார்

புத்தக அறிமுகம் விதைசார் அரசியலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்: ஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க சொல்லிக் கொடுத்தார்கள்! அதன்பிறகு, “இந்த ராட்டைகளை நிறைய செய்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நூல் நூற்கலாம். நாமே பஞ்சை விளைய வைப்போம். நாமே நெய்வோம். நாமே அவைகளை உடுத்திக்கொள்வோம்”

குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு

புத்தக வெளியீட்டு நிகழ்வு மேற்குமலைத்தொடர்ச்சியின் விரிந்துநிற்கும் அந்தப் பெருமலையின் அடிவாரத்தில் முளைத்துநிறைந்த அடர்காட்டுக்குள் அமைந்திருக்கிறது அக்கிணறு. இப்போது வேண்டுமானால் மண்பாதைகளும் சென்றடையும் வழிகளும் வந்துவிட்டிருக்கலாம். ஆனால், காலத்தின் நூறாண்டுகளுக்கு முன்பு, எத்தனையோ இடர்களைத் தாண்டியும் யாரோ ஒரு மனிதன் அந்தக் கிணற்றை அங்கு வெட்டியிருக்கிறார். அவ்வளவு கட்டுமான நேர்த்தியோடும் வடிவின் நிறைவழகோடும் ஆழப்பட்டிருக்கும் அந்தக் கிணறு, இன்றைக்கு நீரற்று தூர்ந்த நிலையிலிருக்கிறது. சொட்டுத்தண்ணீரைக்கூட கிணற்றின் சுனையில் சுரக்கவில்லை. இதற்கு என்ன காரணமென உள்ளெண்ணிப் பார்த்தால், ஏதோவொருவகையில் நம்

இருதயத்தை நோக்கி இரு உரைகள்

புத்தகம் தன்னுரு அடைந்திருக்கிறது   “நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஒரு இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.” – செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது “இயந்திரங்களை விட மனிதத்தன்மையே

சுய நிறைவின் தேடலுக்கான புத்தகம்…

டிராக்டர் சாணி போடுமா? என்ற கேள்வி வெறும் அறிவின் புத்தியில் இருந்து உருவான கேள்வி மட்டுமல்ல, அப்பழுக்கற்ற தூய இருதயத்தில் இருந்து உருவான அன்பின் ஆழம்பொதிந்த கேள்வி. செறுக்கின் உச்சியில் இருக்கும் ஒட்டுமொத்த அறிவியல் உலகனைத்திற்கும் அதன் மனசாட்சியை நோக்கி எழுப்பிய கேள்வி. அதனால்தான் அறிவியலினால் இனி ஒன்றும் இயலாது என்றுணர்ந்து இறுதிகட்டத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கிழக்கு கூட்டத்தின் மனசாட்சி இன்று ஜே.சி.குமரப்பாவையும் அவரை உருவாக்கிய காந்தியத்தையும் அங்குலம் அங்குலமாக தேடுகிறது. இந்த கேள்வி விவசாயிகளுக்கானது என்று

மூன்று புத்தகங்கள் வெளியீடு…

தும்பி – தன்னறம் அரங்கு எண் -20 இன்று மதுரை புத்தக கண்காட்சியில் இயற்கை விவசாயம் மற்றும் அதோடு இயைந்த வாழ்வியலை, எளிமையாய் எடுத்து உரைக்கும் மசானபு புகோகா அவர்களின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” நம் அன்றாடத்தில் இரண்டற கலந்து நிற்கும் பிளாஸ்டிக் குறித்த எதிர்ப்பினை சரியான புரிதலின் வழி உருவாக்கி வரும் க்ரீன் பேஜஸ்ன் “பிளாஸ்டிக் காலம்” மற்றும் மரங்கள் குறித்த தெளிந்த உண்மையினை வெகு ஜன மக்கள் மொழியில் சொல்லும் நாணல் நண்பர்களின் “மண்ணின்

வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த புத்தகம்….

“ஒற்றை தானியம் என்பது ஒரு பிரபஞ்சம். ஒளி, நீர், காற்று, வெப்பம், வெளி, இருள் என இயற்கையின் அடிப்படைக்கூறுகள் அத்தனையும் ஒரு தானியத்துக்குள் திரள்கிறது. ஒன்றுமற்ற புள்ளியாக இருந்து, எல்லாம் நிறைந்ததாக ஒரு தானியமணி இருப்படைதலுக்குப் பின்னணியில் ஒரு பெரும் பயணப்பாதை இருக்கிறது. பேரியற்கையின் அறுந்துவிடாத நீள்கண்ணி, சிறுவிதை வரைக்கும் தொடர்ந்து உயிர்வாழ்க்கையை பேரற்புதமாக மாற்றுகிறது. இந்த உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொண்டால், உலகில் எவ்வுயிருமே போராலும் பசியாலும் பிணியாலும் துயரமடையாது. பிரபஞ்சத்தின் லயத்தோடு ஒத்திசைந்து பூமிக்குள் மனித

மண்ணின் மரங்கள் நூலிலிருந்து

படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பித்தான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வபந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்குப் பழக்கப்படாத தூங்குமூஞ்சிவாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்துவந்த உயிரினங்கள்

“கல்வியில் மலர்தல்” என்கிற நூல் உருவாகிறது

சுதந்திரம் தருவதற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதலளித்த பிறகு, காந்திக்கும் வினோபாவுக்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அதில், சுதந்திர இந்தியாவுக்கான தனிக்கல்வியை வடிவமைக்கும்வரை என்ன செய்வது? எந்தமுறையை பின்தொடர்வது? என பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுந்தன. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட வினோபா, “சுயராஜ்யத்துக்கான புதிய கல்வியை வடிவமைக்கும் காலம்வரைக்கும் இந்தியப் பிள்ளைகள் அனைவருக்கும் விடுமுறை அளித்துவிடலாம். பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துக்குமே இதை முன்னெடுக்கலாம்” என தன் தரப்பை முன்வைக்கிறார். அங்கிருந்த எல்லாரும் அதிர்ந்து, “அதற்கு வருடக்கணக்கு