Description
மணிக்கொடிக்கார்களில் அதிக எழுத்தாளர்கள் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். கும்பகோணம் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காலத்தில் அதிகபட்சம் நூறு கதைகளை எழுதியிருப்பவர்கள். 1935 1950 க்குள் ஆயிரம் கதைகளாவது எழுதியிருப்பார்கள். ஆயிரம் கதைகளையும் நாம் வாசித்திருக்கிறோமா? என்ற கேள்வி நமக்குள் கேட்கவேண்டியிருக்கிறது. இன்றைய நவீன எழுத்துக் கொண்டாடும் மன, நில, உடல் சார்ந்த கதைகளை அவர்கள் அன்றே எழுதி முடித்திருக்கலாம். ஒரே நகரத்தில், ஒரே காலத்தில், இத்தனை எழுத்தாளர்கள், இத்தனை கதைகள் என்பது ஆச்சரியம் தரும் ஒன்று.
டப்ளின் நகரத்தைப் பற்றியும், பெர்லின் நகரத்தையும், மாஸ்கோ நகரத்தையும் எழுதித் தீர்த்தவர் உண்டு. இப்பொழுதும் எழுதி வருகிறார்கள். ஒரு நகரத்தின் கதை என்றளவில் கும்பகோணம் நகரம் பற்றிப் புரிந்து கொள்ள இத்தொகுதி உதவும்.
-ராணிதிலக்

Reviews
There are no reviews yet.