Description
கற்பித்தல் முறை, பாடத் திட்டம், கால அட்டவணை என்ற இவையெல்லாம் பொருளற்ற சொற்கள். பிள்ளைகளினால் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது தவிர வேறு ஏதும் பயன் இல்லை. வாழ்வுக்காக நடைபெறும் செயல்களின் மூலமே கல்வி கிடைக்க வேண்டும். புத்தகங்களை மூளையில் புகுத்துவதனால் மனிதன் அறிவாளி ஆகிவிடக் கூடுமானால், புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரிகள் எல்லாம் அறிவாளிகள் ஆகிவிடும். ஆகவே நிறைப்பதல்ல, நிறைவு தருவதே கல்வி. வகுப்பறைக்குள் இருக்கும் ஒரு குழந்தை, ஜன்னல் வானத்தை நோக்குவதுகூட கல்வியின் ஒரு பகுதிதான். வாழ்சூழலே கல்விக்கான காரணிகளாக அமைக்கிற சமூகமே அகவிடுதலை நோக்கி மனம் நகர்த்தும்.

Reviews
There are no reviews yet.