Description
சுதந்திரமே கற்றலின் அடித்தளமாக இருக்க வேண்டும். இச்சுதந்திரம் ஒருவர் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை உற்று அவதானிக்க, விழிப்போடு இருக்க, சிந்திக்க அவற்றிற்கிடையே நிலவும் உறவுகளைப் புரிந்துகொள்ள ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பினை அளிக்கிறது. நாங்கள் பிள்ளைகளுக்கு எப்போதும் எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை. நாங்கள் அவர்களுக்குத் தங்களைத் தாங்களே கற்றுக் கொள்ள, தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டுணர்ந்து, அதனை அன்றாடம் பயிற்சி செய்து, நிபுணத்துவம் மிக்கவர்களாக உருவாகிட உதவினோம். இங்கு கற்றல் உற்சாகமான செயலாக நிகழ்ந்தேரியது! வாழ்வின் அத்தனை ஏற்றத்தாழ்வுகளினூடும் எங்களின் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இப்பயணத்தில் நாங்கள் பிள்ளைகளிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். அதற்காக நாங்கள் எப்போதுமே தயங்கி நின்றதில்லை. தங்கள் உலகிற்குள் எங்களை அனுமதித்ததற்காக அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்!
– கல்வியாளர் ரகுபாபு

Reviews
There are no reviews yet.